மணிப்பூரில் மீண்டும் பதற்றம் : சுட்டுக் கொல்லப்பட்ட 2 மாணவர்கள்

Government Of India India Manipur
By Sathangani Sep 27, 2023 05:07 AM GMT
Report

இந்தியாவின் மணிப்பூரில் கலவரத்தின் போது காணாமல் போன மெய்தி இனத்தைச் சேர்ந்த இரு மாணவர்களை குகி இனத்தைச் சேர்ந்த ஆயுதக் குழுக்கள் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மணிப்பூரில் கடந்த மே மாதம் மெய்தி இன மக்களுக்கும், குகி இன மக்களுக்கும் இடையே மோதல் ஆரம்பித்து மிகப்பெரிய கலவரமாக மாறியுள்ள நிலையில் இதுவரை 200 இற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியதுடன் ஆயிரக்கணக்கானோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையே மெய்தி இன மக்களில் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் பற்றிய விபரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டதன் அடிப்படையில் சி.பி.ஐ. மற்றும் விசாரணைக்குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

பிரபல பாடசாலையில் கசிப்பு விற்ற மாணவன் கைது

பிரபல பாடசாலையில் கசிப்பு விற்ற மாணவன் கைது


காணொளியால் பதற்றம்

சுட்டுக் கொல்லப்பட்ட குறித்த மாணவர்களது புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு இருந்த நிலையில் அவர்களுடைய நிலைமை என்னவானது என்று தெரியாமலிருந்த நிலையில்  திங்கட்கிழமை இரவு (25)  அவர்கள் பற்றிய பரபரப்பு செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவின.

மணிப்பூரில் மீண்டும் பதற்றம் : சுட்டுக் கொல்லப்பட்ட 2 மாணவர்கள் | Violence Again In Manipur 2 Students Shot Dead

குறித்த மாணவர்களில் ஒருவர் 17 வயதான ஹிஜம் மற்றும் 20 வயதான பிஜம்  இருவரும் முகாம் ஒன்றில் புல்வெளி தரையில் உட்கார வைத்து இருப்பது போன்ற காட்சியும், அவர்களுக்கு பின்னால் ஆயுதம் ஏந்தி சிலர் நிற்பது போன்ற காட்சியும் காணொளி மூலம் பரபரப்பாக பரவியது.

அதே காணொளியில்  அடுத்த சில நிமிடங்களில் அந்த 2 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்று இருந்தது.

இன்று ஜேர்மன் நோக்கிப் புறப்பட்டார் ரணில்

இன்று ஜேர்மன் நோக்கிப் புறப்பட்டார் ரணில்


இந்த காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்ற நிலையில் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் உருவாகியிருக்கிறது.

கடுமையான நடவடிக்கை

மாணவர்கள்  கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கும்  காட்சி பற்றி அரசு விசாரணை தொடங்கி உள்ளது. அந்த 2 பேரையும் குகி இனத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுக்கள் சுட்டு கொன்று இருப்பது தெரிய வந்துள்ளது.

மணிப்பூரில் மீண்டும் பதற்றம் : சுட்டுக் கொல்லப்பட்ட 2 மாணவர்கள் | Violence Again In Manipur 2 Students Shot Dead

இதுபற்றி அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த ஜூலை மாதம் அந்த 2 மாணவர், மாணவி காணாமல் போனது பற்றி விசாரணை நடத்தி வந்தோம். ஏற்கனவே அவர்கள் தொடர்பான வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொல்லப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்" என்று கூறினார்.

கூகுளின் 25ஆவது பிறந்த தினம் இன்று

கூகுளின் 25ஆவது பிறந்த தினம் இன்று


மற்றொரு அரசு உயர் அதிகாரி கூறுகையில், " மாணவர், மாணவியைக் கொன்றவர்கள் மீது உறுதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதேவேளை பொது மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று மணிப்பூர் மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ReeCha
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025