யாழ் நூலகத்திற்கு கொழும்பு மாநகர முதல்வர் விஜயம்
கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்கா (Rossi Senanayake) இன்றைய தினம் யாழ்ப்பாணம் மநகர சபைக்கு விஜயம் மேற்கொண்டார்.
கொழும்பு மாநகர முதல்வரை யாழ்ப்பாணம் மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் வரவேற்றார்.
கொழும்பில் வாழும் மக்களில், மூன்றிலிரண்டு பங்கினர் தமிழர்களாவர். அவர்களில் பெருமளவானோர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவர் என ரோசி சேனாநாயக்கா தெரிவித்தார்.
கொழும்பு மாநாகர சபைக்கும், யாழ்ப்பாணம் மாநாகர சபை மற்றும் மானிப்பாய் பிரதேச சபைக்கும் இடையில், நகர இணைப்பு திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் இந்தப் பயணம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வாழும் மக்களில், மூன்றிலிரண்டு பங்கினர் தமிழர்களாவர். அவர்களில் பெருமளவானோர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவர். எனவே, அந்த மக்களுக்காக, மாநகர சபை என்ற அடிப்படையில், இன, மத பேதமின்றி நல்லிணக்கத்தை அடிப்படையாக்கக் கொண்டு யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளோம் என கூறினார்.
கொழும்பு நூலகத்திலிருந்து யாழ்ப்பாணம் நூலகத்திற்கு, 400 புத்தகங்களைக் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.