வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக படுகொலை செய்யப்பட்ட நபர் தொடர்பான வழக்கு- தாயார் வெளியிட்டுள்ள ஆதங்கம்!
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்(Sathasivam Viyalenthiran) விட்டுக்கு முன்பாக அவரது மெய்க்காவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கடந்த ஜூன் மாதம் 21 ம் திகதி பாலசுந்தரம் என்பவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், தனது மகனைத் திட்டம் போட்டு கொலை செய்து விட்டு தங்களை அலையவிடுகின்றார்கள் என்று தாயார் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் வழக்கு விசாரணை இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.சி ரிஷ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்டவரின் தாயார் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
கடந்த வாரம் ஏறாவூர் காவல்துறையினர் தங்களது வீட்டுக்கு வந்து இன்றய தினம் வழக்கு விசாரணை உள்ளது நீதிமன்றத்திற்கு வரும்படி தெரிவித்துச் சென்றதாகவும், இருப்பினும் இன்றயை தினம் தாம் நீதிமன்றத்தில் காத்திருந்த போதும் இரகசியமாக வழக்கு விசாரணை நடந்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளார் .
காலை 8 மணி தொடக்கம் 1 மணி வரைக்கும் தங்களை வெளியில் வைத்து விட்டு இறுதியாக நாங்கள் நீதிமன்றத்திற்குள் நுழையும் போது எமது மகனின் வழக்கு இடம்பெற்று முடிந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பணம் பதவியை வைத்துக் கொண்டு மண் உரிமத்துக்கு பணத்தை வாங்கி விட்டு எனது மகனுடன் கதைப்பதாகக் கூறி சுட்டுக் கொலை செய்து விட்டு எங்களையும் இப்படி சித்திரவதை செய்கினறரக்ள். எனது மகனை திருப்பி என்னிடம் தருவார்களா ? எனது மகன் கொலை செய்யப்பட்ட போது பலர் இராஜங்க அமைச்சர் வீட்டில் இருந்துள்ள்ளார்கள்.
யருமே எமக்கு சாட்சி சொல்ல முன்வாரர்கள் இல்லை நீதிபதி எமக்கு நல்ல தீர்வை பெற்று தர வேண்டும் என கண்ணிருடன் தெரிவித்துள்ளார். நீதிபதி இந்த வழக்கை சிஐ.டிக்கு மாற்றக் கோரியும் மட்டக்களப்பு காவல்துறை குறித்த வழக்கினை பிரிதொரு பிரிவுக்கு இதுவரைக்கும் பாரம் கொடுக்கவில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த வழக்கானது 11 மாதம் 1ம் திகதி மீண்டும் அழைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.