இஸ்ரேலின் கொலைக் கருவிகளுக்கு தம்மைத்தாமே காட்டிக்கொடுத்த ஹமாஸ் தலைவர்கள்!
அண்மையில் காசா மீது இஸ்ரேல் வான்படை மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 450 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு, 650 இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகின்றது.
அதேவேளை அந்தத் தாக்குதலில் நான்கு முக்கிய தளபதிகள் உட்பட சுமார் 70 வரையிலான ஹமாஸ் உறுப்பினர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
குறிப்பாக ஹமாஸ் அமைப்பின் இடைநிலைத் தளபதிகள் பலர் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் தரப்புச் செய்திகள் கூறுகின்றன.
அன்றைய தினம் நன்ளிரவில் இஸ்ரேல் மேற்கொண்ட அந்தப் பாரிய தாக்குதலை, 'யுத்தநிறுத்த மீறல்', 'பொதுமக்கள் மீதான அராஜகம்', 'இன அழிப்பு' என்று பொதுப்பார்வையில் உலகம் அடையாளப்படுத்திவருகின்ற அதேவேளை, இஸ்ரேல் அன்றை தினம் மேற்கொண்ட அந்தத் தாக்குதல் என்பது- மிக மிகத் திட்டமிட்டு மேற்கொள்ளக்கட்ட கச்சிதமான ஒரு அம்புஷ் தாக்குதல் என்றுதான் கூறுகின்றார்கள் சில இராணுவ ஆய்வாளர்கள்.
இந்த விடயம் பற்றி ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' ஒளியாவனம்:


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்