உயிர் பெற்ற கமேனியின் சமூக ஊடக கணக்கு! இஸ்ரேலுக்கு வெளியான எச்சரிக்கையால் பரபரப்பு
ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி உயிரிழந்த பின்னரும் அவரது அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கில் இருந்து இஸ்ரேலுக்கு எதிரான கடும் எச்சரிக்கை பதிவொன்று வெளியிட்டுள்ளது.
எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்ட அந்த பதிவில், “சியோனிச ஆட்சி பெரிய தவறு செய்துள்ளது; அதன் விளைவுகள் அந்த ஆட்சியை துவண்டுபோகச் செய்யும்” எனக் கூறப்பட்டுள்ளது.
பதிவில் உள்ள காட்சிகள்
அந்த பதிவுடன் இணைக்கப்பட்டிருந்த படத்தில், ஈரானின் ஏவுகணை சக்தியை காட்டும் மூன்று பகுதிகளைக் கொண்ட காட்சி இடம்பெற்றுள்ளது.
The Zionist regime has made a big mistake, and its consequences will make the regime desperate, by God's grace. pic.twitter.com/vBVMXIYjaf
— Khamenei.ir (@khamenei_ir) March 6, 2026
இதில் பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்படுவது, இரவு நேரத்தில் எதிரி நகரங்களை நோக்கி ஏவுகணைகள் தாக்குவது, மேலும் பாலைவனப் பகுதியில் ஈரானிய ஏவுகணை இயக்கப்படுவது போன்ற காட்சிகள் காணப்படுகின்றன.
அத்துடன், உயர் தொழில்நுட்ப ஏவுகணை உற்பத்தி நிலையத்தில் விஞ்ஞானிகள் பணியாற்றும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
ஏழாவது நாள் மோதல்
இந்த பதிவு சமூக ஊடகங்களில் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.சிலர் அதை கேலி செய்து கருத்துகள் வெளியிட்டுள்ள நிலையில், மற்றவர்கள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து பதிவுகளை பகிர்ந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சுற்றியுள்ள மோதல் ஏழாவது நாளை எட்டியுள்ளது.
கூட்டு அமெரிக்க–இஸ்ரேல் வான் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதுடன், ஈரானின் பதிலடி நடவடிக்கைகளும் மத்திய கிழக்கு முழுவதும் தொடர்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |