கொழும்பில் மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்! காவல்துறையினர் குவிப்பு (காணொளி)
கொழும்பு - விகாரமகாதேவி பூங்கா பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்த மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்டு வரும் பேரணியானது காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம பகுதிக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
கொழும்பு - கோட்டை, இலங்கை வங்கி வீதியில் வைத்தே கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சைத்தியம் வீதி, மாவத்தை, இலங்கை வங்கி மாவத்தை, முதலிகே மாவத்தை ஆகிய பகுதிகளில் பிரவேசிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
எனினும், நீதிமன்ற உத்தரவை மீறி அங்கு மாணவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் அப்பகுதியில் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.