கனமழை காரணமாக திறக்கப்படவுள்ள வான்கதவுகள்!
நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீரின் கொள்ளளவு 50 சதவீதத்தை தாண்டியுள்ளது என நீர்ப்பாசன இயக்குனர் எஸ்.பி.சி. சுகீஸ்வர பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, சில நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளதாகவும், மேலும் சில நீர்த்தேக்கங்களில் கசிவு ஏற்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மூன்று அடி உயரத்திற்கு திறக்கப்பட்டு வினாடிக்கு 11,200 கன அங்குல கொள்ளளவு கொண்ட நீரை வெளியேற்ற ஆரம்பித்துள்ளது.
திடீர் வெள்ளப்பெருக்கு
இதனால், தெதுரு ஓயாவின் தாழ்வான பகுதிகளில் நீர்வரத்து அதிகரிக்கும் எனவும், திடீர் வெள்ளப்பெருக்குகள் குறித்து அவதானமாக இருக்குமாறும் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் கசிவு மட்டத்தை எட்டியுள்ளதுடன், அத்தனகல்ல, கம்பஹா, ஜா-எல, மற்றும் கட்டான ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (02) மாலை பெய்யும் மழையைப் பொறுத்து தற்போதைய சிறு வெள்ள நிலை அதிகரிக்கும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 6 மணி நேரம் முன்