பிரித்தானிய தம்பதியினருக்கு குமாரி ஹஸ்தியா முன்றலில் திருமணம்....!
களுத்துறை கட்டுகுருந்தே பிரதேசத்தில் சிங்கள கலாசார முறைப்படி பிரித்தானிய தம்பதியர் தமது திருமண வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர்.
இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையரில் வசிக்கும் 56 வயதான ரூபர்ட் ஜூலியனுக்கும் 53 வயதான நிக்கி ஜேன் என்பவருக்கும் குறித்த திருமணம் நடைபெற்றது.
மலையக நடனக் கலைஞர்களுடன் கந்த விகாரையின் குமாரி ஹஸ்தியா முன்றலில் குறித்த திருமணம் இடம்பெற்றது.
முதல் வெளிநாட்டு திருமணம்
சிங்கள சம்பிரதாயப்படி, ஜெயமங்கல பாடிக்கொண்டே தெப்பச் சடங்குகளை செய்து திருமணம் செய்து கொண்டார்.
களுத்துறை கட்டுகுருந்த கடற்கரைக்கு அருகில் உள்ள சுற்றுலா விடுதியில் நடைபெற்ற திருமண விழாவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா தொற்றின் பின்னர் இலங்கையில் நடைபெறும் முதல் வெளிநாட்டு திருமணம் இதுவென கூறப்படுகிறது.
இலங்கையில் நிலைமை நன்றாக இருப்பதாகவும், உங்களைப் பார்வையிட வருமாறு அழைப்பதாகவும் திரு ரூபர்ட் ஜூலியன் தெரிவித்தார்.


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்