தேசபந்து தென்னகோனுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பகுதியில் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்து மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, குறித்த வழக்கு மறுபரிசீலனைக்காக டிசம்பர் 17 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (10) இந்த வழக்கு அழைக்கப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பதவியிலிருந்து இடைநீக்கம்
இதன்போது, இந்த வழக்குடன் தொடர்புடைய தேசபந்து தென்னகோன் மற்றும் ஏனைய பிரதிவாதிகள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
அதன்படி, இந்த வழக்கு டிசம்பர் 17 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோன் காவல்துறை மா அதிபர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
