மைத்திரிக்கு நடக்கப்போவது என்ன- 12 ஆம் திகதி வருகிறது முக்கிய தீர்ப்பு
போதிய புலனாய்வுத் தகவல் கிடைத்தும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாக தெரிவித்து, முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு எதிர்வரும் 12ஆம் திகதி உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்படவுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த தீர்மானத்தை அறிவிக்கவுள்ளது.
12 மனுக்கள் தாக்கல்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், கத்தோலிக்க மதகுருக்கள் உட்பட பல தரப்பினரால் 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மைத்திரி உட்பட மூவர் பிரதிவாதிகள்

முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.