அரசாங்கத்துடனான தனிப்பட்ட கோபத்தால் வெளியான பொய்யான குற்றச்சாட்டு
srilanka
colompoportcity
wijedasarajapaksa
pavithrawanniarachi
By Sumithiran
அரசாங்கத்துடனான தனிப்பட்ட கோபத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாக அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துடனான தனிப்பட்ட கோபத்தினால் இவ்வாறான பொய்யான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தை வலுவிழக்கச் செய்வது இதன் நோக்கமாகும். நாட்டிற்கு உதவி வழங்கும் கோடீஸ்வரர்கள். வல்லரசு நாடுகளை பேதத்திற்கு உள்ளாக்கும் வகையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்தார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்