ஊழல் குற்றச்சாட்டு : இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் இரத்து செய்யப்படுமா...!
அதானி (adani) குடும்பத்தின் மீதான 2200 கோடி ஊழல் குற்றச்சாட்டை அமெரிக்கா (us) சுமத்தியதை அடுத்து அதானி நிறுவனத்துடன் செய்து கொண்ட ரூ 6200 கோடி கோடி ஒப்பந்தம் இரத்து செய்யப்படுவதாக கென்ய (kenya) ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் அதானி நிறுவனத்தால் முன்னெடுக்கப்டவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் மன்னார் (mannar) காற்றாலை மின் உற்பத்தி திட்ட ஒப்பந்தத்தை இலங்கை (sri lanka) அரசும் இரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி
அதானி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட மன்னார் காற்றாலை மின் உற்பத்தி ஒப்பந்தத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கா(anura kumara dissanayake) பரிசீலனை செய்து வருவதாகவும், எந்த நேரத்திலும் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உத்தரவை அவர் பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் 484 மெகா வாட்ஸ் மின்சார உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மேற்கொள்ளப்பட இருந்தது.
மோடியின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்த கோட்டாபய
இந்த திட்டம் குறித்த வழக்கு ஏற்கனவே இலங்கை உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.
பிரதமர் மோடி(narendra modi) வற்புறுத்தியதால், இந்த திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (gotabaya rajapaksa)ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
