சீனியின் விலையும் அதிகரிக்குமா? டொலர் தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள நெருக்கடி
price
sugar
increased
By Sumithiran
நாட்டில் பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்ட நிலையில் அவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் சீனியின் விலை கட்டுக்குள் இருந்து வந்தது. எனினும் தற்போது சீனியின் விலை மீளவும் அதிகரித்த நிலையில் சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு நாட்டின் முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம்(Basil Rajapaksa) கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமது கோரிக்கை அடங்கிய கடிதத்தை அவர்கள் நிதியமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது சந்தையில் வெள்ளை சீனி இல்லை எனவும் சிவப்பு சீனி மாத்திரமே உள்ளதாகவும் சீனி இறக்குமதியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அரசாங்கத்தினால் சீனி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதி தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.