அளவுக்கு மீறினால் ஆபத்து! அரசின் முடிவு தொடர்பில் விமல் வெளியிட்ட தகவல்
அரசாங்கத்தினால் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தல்கள் குறித்து அமைச்சர் விமல் வீரவன்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.
பிழையான தீர்மானங்களை எடுத்து அதன் ஊடாக வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தல்களை வாபஸ் பெற்றுக்கொள்ள நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரசாயன உரப் பயன்பாட்டு தடை குறித்த வர்த்தமானி அறிவித்தலும் அவ்வாறான ஓன்றேயாகும் என அவர் தெரிவித்துள்ளார். மண்ணுக்கு தேவையான உரம் வழங்கப்பட வேண்டும் எனவும், சரியான அளவில் இரசாயன உரத்தைப் பயன்படுத்தினால் ஆபத்து கிடையாது எனவும் அவர் கூட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு விடயமும் அளவுக்கு மீறினால் அது ஆபத்தாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
இரசாயன உரயப் பயன்பாடு தடையை நீக்கியமை விவசாயிகளின் போராட்டத்தினால் அல்ல எனவும் அரசாங்கத்திற்கு உள்ளேயே எழுந்த வாதப் பிரதிவாதங்களினாலாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.