கெஹலியவிற்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்த (Jayampathi Heenkenda) ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு இன்று (18) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் இடம்பெற்றது.
இலஞ்ச ஊழல் விசாரணை
மேலும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழிகாட்டுதலின் கீழ் முறைப்பாட்டில் மேலும் ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டன.
பின்னர் நீதிமன்றம் மேலதிக சாட்சியங்களுக்காக ஜூன் 13 ஆம் திகதி வரை குறித்த வழக்கை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது.
இதேவேளை கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் ஜயம்பதி ஹீன்கெந்த ஆகியோர் மீது, அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் நிதியில் இருந்து தனது சொந்த கையடக்கத் தொலைபேசி கட்டணமாக 240,000 ரூபாவை செலுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறி, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
