யாழில் பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறை - மேல் நீதிமன்றம் அதிரடி
யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி யூ.பு.அலெக்ஸ்ராஜா இன்று (21.05.2026) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் கடந்த 2020 ஜூன் மாதம் 1.475 கிராம் கெரோயின் போதைப்பொருள் உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை மற்றும் 1 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
அதியுச்ச தண்டனை
வழக்கு தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாகி இருந்த அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன், அதிகரித்து வரும் போதை பொருள் தொடர்பான குற்றங்கள் மற்றும் உயர் நீதிமன்ற வழக்குகளை மேற்கோள்காட்டி போதை பொருள் குற்றவாளிகளுக்கு அதியுச்ச தண்டனை வழங்க வேண்டும் என சமர்ப்பனங்களை மேற்கொண்டு இருந்த நிலையில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 12 மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதேவேளை கடந்த வாரமும் 1.4g போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்து.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |