கணவனின் கொடூரச்செயல் - மூன்று பிள்ளைகளின் தாய் படுகொலை
தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்த சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு, பொரளை - சர்பன்டைன் வீதி அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை குறித்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த கொலை சம்பவம் இன்று அதிகாலை 1.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், குறித்த பெண் மூன்று பிள்ளைகளின் தாய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கணவர் வைத்தியசாலையில்

குடும்ப தகராறு காரணமாக கொலை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதுடன், கொலையை செய்த கணவர் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடிக்கு வந்து கீழே குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதல் மாடியில் இருந்து குதிக்கும் முன் அவர் தனது கையை அறுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த கணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொரளை காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.