கொழும்பு துப்பாக்கிச் சூடு சம்பவம் ...! பெண் கைது
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13, ஆட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்த 32 வயதான பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் கடந்த 07 ஆம் திகதி கொட்டாஞ்சேனை காவல்துறை பிரிவின் 16 ஆவது ஒழுங்கைப் பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், இந்தக் குற்றத்தைச் செய்ய வெளிநாட்டில் வசிக்கும் ஒரு குற்றக்கும்பல் உறுப்பினருடன் தொடர்பைப் பேணி, குற்றவாளிகளுக்கு மோட்டார் வாகனமொன்றை வழங்கியமை மற்றும் கொல்லப்பட்டவர் பயணித்த வீதி பற்றிய தகவல்களை இந்தச் சந்தேகநபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருக்கு வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
அதன்படி மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 3 நாட்கள் முன்