அதிகாலையில் கொடூரம்..! காதலியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு உயிர்மாய்த்த காதலன்
மரங்கல பகுதியில் காதலியை கொலை செய்து விட்டு இளைஞன் ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (23) அதிகாலை அம்பாறை (Ampara) - பதியதலாவ - மரங்கல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குள் பிரவேசித்த இளைஞன் இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும் வெட்டுக் காயங்களை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
பின்னர், காதலி என சந்தேகிக்கப்படும் இளம் பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு காதலனும் தனது கழுத்தை அறுத்து உயிர்மாய்த்துள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் 23 வயதான சரோஜா உதயங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளது. கொலையைச் செய்த இளைஞன் மொனராகலை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த தாயும் தந்தையும் தற்போது மஹா ஓயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் சம்பவம் குறித்து பதியதலாவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
