தலிபான்களின் வெறிச்செயல் - ஆப்கானில் மகளிர் கரப்பந்து அணி வீராங்கனை தலை துண்டித்து கொலை
ஆப்கானிஸ்தான் மகளிர் கரப்பந்து அணியின் வீராங்கனையொருவர் தலிபான்களால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மஹ்ஜபின் ஹகிமி(Mahjabin Hakimi) என்ற வீராங்கனையே தலிபான்களால் கொல்லப்பட்டார். அத்துடன், அவரின் குடும்பத்தினரும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு முன்பு அணியிலிருந்த இரண்டு வீராங்கனைகளால் மட்டுமே நாட்டிலிருந்து தப்பிக்க முடிந்தது. ஆப்கானிஸ்தானை அவர்கள் கைப்பற்றியதையடுத்து, வீராங்கனைகளை கொலை செய்ய ஆரம்பித்தனர். அதிலும் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்று பிரசித்தி பெற்றிருந்த ஆப்கானிஸ்தான் மகளிர் கரப்பந்தாட்ட அணியைத் தேடுவதில் அவர்கள் மிகவும் ஆர்வம் காட்டினர்.
இதனால் குறித்த அணியில் இருந்த வீராங்கனைகள் தலிபான்களிடமிருந்து தப்பியோடி மறைந்து வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
தலிபான்களால் கொலை செய்யப்பட்ட காபூல் நகராட்சி கரப்பந்து கழகத்தில் விளையாடிய மஹ்ஜபின், அந்தக் கழகத்தின் நட்சத்திர வீரர்களில் ஒருவராகவும் திகழ்ந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு, அவரது துண்டிக்கப்பட்ட தலை மற்றும் இரத்தம் தோய்ந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
Mahjabin Hakimi, a member of the Afghan women's national volleyball team who played in the youth age group, was slaughtered by the Taliban in Kabul. She was beheaded.
— Sahraa Karimi/ صحرا كريمي (@sahraakarimi) October 19, 2021
@EUinAfghanistan @unwomenafghan https://t.co/wit0XFoUaQ