இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மாணிக்கக் கல் எங்கே..! நிலவரம் என்ன...
இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இயற்கை மாணிக்கக் கல் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசியாவின் ராணி என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய இயற்கை மாணிக்கக் கல் இலங்கையின் ஹொரணை, தல்கஹவில பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
உலகில் மிகப் பெரிய மாணிக்கக் கல்லானது இக்கல்லின் எடை 310 கிலோ கிராம் எனவும் இது Blue Sapphire ரகத்தை சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த மாணிக்கக்கல் 6 மாதங்களுக்கு முன் சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் இதுவரை விற்பனை செய்யப்படவில்லை என இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மாணிக்க கல்லின் மொத்த பெறுமதி
அதேவேளை, இந்த மாணிக்க கல்லின் மொத்த பெறுமதி 2,000 கோடி ரூபாவுக்கும் அதிகம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த மாணிக்கக்கல்லினை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்லும் போது பெற வேண்டிய 25% வைப்புத் தொகையின்றி எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, குறித்த மாணிக்கக்கல்லினை ஆய்வுக்கு எடுத்துச் செல்ல தேவையான பணம் மட்டுமே அதிகாரியிடம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
