சட்ட விரோத வாகன இறக்குமதி! யோஷித ராஜபக்சவிடம் CID இரண்டு மணிநேர விசாரணை
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, இன்று காலை குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) முன்னிலையாகியிருந்தார்.
இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைக்கு மாறாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வாகனம் தொடர்பான முறைகேடு குறித்து யோஷித ராஜபக்சஷவிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த வாகனம் 2020/2021-ஆம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்டதை சுங்கத்துறை கண்டறிந்ததை அடுத்து, ஒரு சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக காவல்துறை கூறியது.
சம்பவம் தொடர்பான விசாரணை
வாகனத்தின் உரிமையாளரால் அதன் இறக்குமதி தொடர்பான தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாததால், அந்த வாகனம் அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வாகனம் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்டதாக அரசாங்கப் பகுப்பாய்வாளர் கண்டறிந்ததாக காவல்துறை கூறியது .
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது சி.ஐ.டி ஏற்கனவே பல சந்தேக நபர்களைக் கைது செய்திருந்தது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் யோஷிதவிடம் வாக்குமூலம் கோரப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
இரண்டாம் இணைப்பு
வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து சற்றுமுன்னர் வெளியேறியுள்ளார்.
அவர் விசாரணைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (12.08.2026) முற்பகல் சுமார் 10 மணியளவில் முன்னிலையானார்.
இந்நிலையில் 2 மணித்தியாலயங்களுக்கும் அதிக நேரம் இடம்பெற்ற விசாரணைகளின் பின் அவர் வெளியேறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ சற்று முன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார்.

இடம்பெற்று வரும் விசாரணை ஒன்றுக்கு தொடர்புடையதாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே குற்றப் புலனாய்வுதிணைக்களத்திற்கு இன்று இவர் (12.08.2026) வருகை தந்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |