யாழில் மதிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
Sri Lanka Police
Jaffna
Accident
Death
By Sathangani
யாழில் (Jaffna) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் மந்திகை - மடத்தடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் வடமராட்சி - அல்வாய் கிழக்கை சேர்ந்த பிரபாகரன் பிரணவன் (வயது 23) என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ். போதனா மருத்துவமனை
உயிரிழந்த இளைஞர் கடந்த சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மந்திகை - மடத்தடி பகுதியில் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானார்.

இதில் படுகாயமடைந்த அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்