வவுனியாவில் குளத்திலிருந்து மீட்கப்பட்ட இளைஞன் : சடலத்தை வழங்குவதில் இழுபறி

Vavuniya Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Apr 17, 2025 10:36 AM GMT
Report

புதிய இணைப்பு

சட்ட வைத்திய அதிகாரி வராமையால் வவுனியாவில் குளத்தின் அலைகரைப் பகுதியில் இருந்து இரத்தக்கறை காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலத்தை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வவுனியா, பாவற்குளத்தின், சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து நேற்று (16.04.2025) மாலை இளைஞர் ஒருவரின் சடலம் இரத்தக் கறை காயங்களுடன் மீட்கப்பட்டிருந்தது.

வவுனியாவில் குளத்திலிருந்து மீட்கப்பட்ட இளைஞன் : சடலத்தை வழங்குவதில் இழுபறி | Young Man Dead Body Recovered In Vavuniya

சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த புதுவருட தினமன்று காணாமல் போயிருந்த வவுனியா விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதான இளைஞன் என அடையாளம் காணப்பட்டிருந்தார்.

குறித்த சடலத்தை நேற்று (16) மாலை பார்வையிட்ட பதில் நீதவான் அன்ரன் புனிதநாயகம் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டதுடன், இது தொடர்பான துரித விசாரணைகளை முன்னெடுக்குமாறும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

வவுனியா வைத்தியசாலையின் பிணவறை குளிரூட்டிகள் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால், குறித்த சடலம் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், வவுனியா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வராமையால சடலம் உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படாது, செட்டிகுளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளதாக இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழில் முறைப்பாட்டை ஏற்க மறுத்து காவல்துறையினர் அச்சுறுத்தல்!

யாழில் முறைப்பாட்டை ஏற்க மறுத்து காவல்துறையினர் அச்சுறுத்தல்!

முதலாம் இணைப்பு

வவுனியாவில் (Vavuniya) இரத்தக்கறைகளுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் பாவற்குளத்தின் அலைகரைப்பகுதியில் இன்று (16.04.2025) மீட்கப்பட்டதாக உலுக்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, விநாயகபுரத்தை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிள்ளையான் விடயத்தில் அரசு தோற்றுவிட்டது: உதய கம்மன்பில

பிள்ளையான் விடயத்தில் அரசு தோற்றுவிட்டது: உதய கம்மன்பில

காவல்துறை விசாரணை

உலுக்குளம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமைய சடலம் இன்று (16) மீட்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் குளத்திலிருந்து மீட்கப்பட்ட இளைஞன் : சடலத்தை வழங்குவதில் இழுபறி | Young Man Dead Body Recovered In Vavuniya

உயிரிழந்த நபர் கடந்த 14ஆம் திகதியில் இருந்து காணாமல் போயிருந்ததாக அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மீட்கப்பட்ட சடலத்தில் இரத்தக்கறைகள் படிந்துள்ளமையினால் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

புலம்பெயர்ந்தோர் விவகாரத்தில் முக்கிய முடிவு: மனம் மாறும் ட்ரம்ப்!

புலம்பெயர்ந்தோர் விவகாரத்தில் முக்கிய முடிவு: மனம் மாறும் ட்ரம்ப்!

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்