யாழில் பிரபல கால்பந்தாட்ட வீரரின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்
யாழில் (Jaffna) ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் பிரபல கால்பந்தாட்ட வீரரின் இறுதி சடங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் காணாமல் போன பிரபல உதைபந்தாட்ட வீரர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உடுத்துறையை சேர்ந்த உதைபந்தாட்ட வீரரான 27 வயதுடைய ஜெசிந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நிலவும் சீரற்ற காற்று
மேற்படி இளைஞன் கடந்த (28.12.2025) பிற்பகல் தனது நண்பர்களுடன் கடலில் நீராடுவதற்காக அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தாளையடி கடற்கரைக்கு நீராட சென்றுள்ளார்.

இதன்போது, கடல் பகுதியில் நிலவும் சீரற்ற காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் இந்த இளைஞன் கடலோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனை நேற்றும் மற்றும் நேற்று முன்தினம் முழுவதும் வடமராட்சி கிழக்கு இளைஞர்கள் பொதுமக்கள் என பலரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இரு நாட்கள் கடந்து நேற்று அதிகாலை குறித்த இளைஞன் சடலமாக கரை ஒதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீரரின் இறுதி சடங்கு
கரை ஒதுங்கிய பிரபல உதைபந்தாட்ட வீரரின் இறுதி சடங்கு இன்றைய தினம் காலை 8 மணியளவில் அவரின் வீட்டில் இருந்து எடுத்துவரப்பட்டு இறுதி சடங்குக்காக உடுத்துறை பாரதி விளையாட்டுக்கழக மைதானத்தில் வைக்கப்பட்டது.

இவ் இறுதி சடங்கில் இலங்கை முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான வீரர் வீராங்கனைகள் வருகை தந்து குறித்த விளையாட்டு வீரருக்கு இறுதி சடங்கு செலுத்தினர்.
பின்னர் பாரதி விளையாட்டுக் கழகத்தின் சீருடை வீரருக்கு வழங்கப்பட்டது அதை தொடர்ந்து உதைபந்தாட்ட காலணியும் வைக்கப்பட்டு இறுதி சடங்கு இடம் பெற்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |