புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞன் மீது காவல்துறையினர் கொலைவெறி தாக்குதல்
கெஸ்பேவ காவல்துறை புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட சிவில் உடையில் இருந்த காவல்துறை அதிகாரிகளால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட 22 வயது இளைஞர் தற்போது, களுபோவில பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தாக்குதலுக்கு உள்ளான இளைஞர், பாதுக்கையில் உள்ள தனது வீட்டிலிருந்து பிலியந்தலையில் உள்ள தனது சகோதரனின் வீட்டிற்கு வாடகை வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஒரு நண்பரைக் கண்டு வண்டியில் இருந்து இறங்கி பேசிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் சம்பவம்
அந்த சந்தர்ப்பத்தில் வந்த கெஸ்பேவ காவல்துறையினரின் ஜீப் ரக வாகனத்தை கண்டு, அங்கிருந்து வேறொரு நபர் தப்பியோடியுள்ளார்.
இந்த நிலையில், நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த இளைஞனிடம் தப்பியோடியவர் யார் என்று காவல்துறையினர் கேட்ட போது, தனக்கு தெரியாது என பதிலளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, குறித்த இளைஞனையும் அவரது நண்பரையும் காவல்துறை அதிகாரிகள் தரையில் தள்ளி தாக்கியுள்ளனர்.
அந்த இடத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, தாக்கப்பட்ட இளைஞனும் அவரது நண்பரும் ஜீப்பில் சிறிது தூரம் அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மீண்டும் கீழே இறக்கி மீண்டும் தாக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 மணி நேரம் முன்
