பாடசாலை மாணவர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
நாள் ஒன்றுக்கு மாணவர்கள் பாடசாலைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளின் சுமை அதிகரிப்பால் மாணவர்கள் மத்தியில் பல உடல்நலப் பிரச்சினைகள் எழுந்துள்ளன.
புத்தகப்பையின் சுமை
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அளவுகோல்களின்படி, ஒரு புத்தகப்பையின் சுமை மாணவர் ஒருவரின் நிறையிலிருந்து 15 முதல் 20 சதவீதம் வரை இருக்க வேண்டும்.
குறித்த பிரச்சினை தொடர்பில் அவ்வப்போது விவாதங்கள் நடத்தப்பட்டாலும், சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றால் உரிய நடவடிக்கையை எடுக்க முடியவில்லை.
இதன் காரணமாக, பாடசாலை மாணவர்களிடையே முதுகுத்தண்டு வலி, தலைவலி ,கழுத்து வலி மற்றும் நரம்பு தொடர்பான கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. எனவே அந்த பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும்.”என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 மணி நேரம் முன்
