கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்
கட்டுநாயக்க விமான நிலையத்தில்(BIA) சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று(23.03.2025) இடம்பெற்றுள்ளது.
செவனகல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணொருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
குறித்த சந்தேகநபர் சுற்றுலா விசாவில் துபாய் சென்று சிகரெட்டுகளுடன் குவைத் சென்றுள்ளதுடன் பின்னர் அவர் இன்றையதினம் 04.00 மணிக்கு குவைத்திலிருந்து ஜசீரா ஏர்வேஸ் விமானம் J - 9551 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
தனது பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 35 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா மதிப்புடைய வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 23,600 "மான்செஸ்டர்" சிகரெட்டுகள் அடங்கிய 118 சிகரெட் கார்டூன்கள் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், குறித்த சந்தேகநபர் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 26ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 13 மணி நேரம் முன்
