நல்லூர் திருவிழாவில் சங்கிலி அறுக்க முயன்ற இளம் யுவதிக்கு நேர்ந்த கதி
யாழ் (Jaffna) நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி ஒருவர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றைய தேர் திருவிழாவின் போது, இளம் யுவதி ஒருவர், பக்தர்களுக்கு இடையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியுள்ளார்.
தங்க சங்கிலிகள்
அதனை அப்பகுதியில் இருந்த சாரணர்கள் அவதானித்து யுவதியை தொடர்ந்து அவதானித்துள்ளனர்.
அதன் போது குறித்த யுவதி ஒரு பெண்ணிடம் சங்கிலி அறுக்க முற்பட்ட வேளை சாரணர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
பின்னர் அப்பகுதியில் இருந்த காவல்துறையினரிடம் யுவதி ஒப்படைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் யுவதியை அழைத்து சென்று சோதனை செய்த போது அவரது உடைமையில் இருந்து மூன்று தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளன.
காவல்துறையினரிடம் முறைப்பாடு
இதையடுத்து, யுவதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தவேளை , யுவதி கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் எனவும், அவருடன் மேலும் சில நபர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வந்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில், யுவதியுடன் வந்த ஏனையவர்கள் தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் யுவதியின் நடவடிக்கைகளை அவதானித்து , யுவதியை கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சாரணர்களுக்கும் காவல்துறையினர் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
அதேவேளை தேர் திருவிழாவின் போது , தமது தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதாக எட்டு பேர் காவல்துறையினரிடம் முறைப்பாடு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
