யாழ்ப்பாணத்தில் வாளுடன் சிக்கிய இளைஞன்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
By Sumithiran
யாழ்ப்பாணம் பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மூன்று வாள்கள் மற்றும் கையடக்க தொலைபேசி என்பனவும் மீட்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் குறித்த கைது நடவடிக்கை இன்று(07) முன்னெடுக்கப்பட்டது.
நீண்டகாலமாக தலைமறைவாக இருந்தவர்
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் 24 வயதான குறித்த சந்தேக நபரை நாளை(08) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த குறித்த சந்தேக நபருக்கு எதிராக ஏற்கனவே சில குற்றச் செயல்கள் தொடர்பிலான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
