திருகோணமலையை வைத்து விடுதலைப் புலிகளிடம் பேரம் பேசிய சீனா! கொடுக்கப்பட்ட பதிலடி

Trincomalee LTTE Leader India China Ship In Sri Lanka Yuan Wang 5
By Vanan Aug 19, 2022 07:30 PM GMT
Report

திருகோணமலையை வைத்து விடுதலைப் புலிகளிடம் சீனா பேரம் பேசியது எனவும் அதனை விடுதலைப் புலிகள் மறுத்தனர் எனவும் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் அய்யாநாதன்.

எமது ஊடகத்தின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“ 1987இல் மேற்கொள்ளப்பட்ட இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் இருக்கக்கூடிய முக்கிய விடயமாக, இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கைக்கும் இலங்கை தன் மண்ணைத் தரக்கூடாது என்ற முக்கிய சாராம்சம் பதிவிடப்பட்டிருந்தது.

அப்படியான சூழலே அன்றைய காலகட்டத்தில் நிலவியது. ஆனால் தற்போது அந்த நிலை இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. அந்த நிலை முற்றிலுமாக மாறிவிட்டது.

செயற்கைக்கோள்களின் துல்லியமான தகவல் வழங்கல்

திருகோணமலையை வைத்து விடுதலைப் புலிகளிடம் பேரம் பேசிய சீனா! கொடுக்கப்பட்ட பதிலடி | Yuan Wang 5 China Spy Ship Ltte India Safe

இறுதி யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியை எடுத்துக்கொண்டால் உலக நாடுகளினுடைய செயற்கை கோள்கள் எல்லாம் விடுதலைப் புலிகளினுடைய போர் தளபாடங்களை காட்டிக்கொடுத்து அழிவிற்கு முக்கியமான காரணமாக இருந்தது.

அதனை வைத்து ஏறத்தாழ 10இற்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டது. அத்தோடு ஆயுதக் கிடங்குகளும் இவ்வாறான செயற்கைக்கோள்களின் துல்லியமான தகவல் வழங்குதல் மூலமாக தாக்கி அழிக்கப்பட்டன.

விடுதலைப் புலிகளுடைய பின்னடைவுக்கு முக்கியமாக இந்த கப்பல்களின் மூழ்கடிப்பே காரணம் எனக் கூறப்படுகிறது.

ஆனால் விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்த காலம் வரைக்கும் இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அதற்கு காரணம், விடுதலை புலிகள் இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கைக்கும் எந்த நாடு முன் வந்தாலும் அதனை அனுமதிக்கவில்லை.

விடுதலைப் புலிகளிடம் பேரம் பேசிய சீனா

திருகோணமலையை வைத்து விடுதலைப் புலிகளிடம் பேரம் பேசிய சீனா! கொடுக்கப்பட்ட பதிலடி | Yuan Wang 5 China Spy Ship Ltte India Safe

திருகோணமலையை வைத்து விடுதலை புலிகளுடன் சீனா பேரம் பேசல்களை மேற்கொண்டிருந்தது. ஆனால், விடுதலைப் புலிகளின் தலைவரைப் பொறுத்த வரைக்கும் அவர் ஒரு விடயத்தில் தெளிவாகவே இருந்தார்.

அது என்னவென்றால், இந்தியாவுடன் தமக்கு இருக்கக்கூடிய ஒரு புரிதல் பல்வேறு காரணங்களால் தட்டிக் கழிக்கப்படுகின்றது எனும் அரசியல் பின்னணியை உணர்ந்தவராக இருந்தார்.

ஆனாலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப் புலிகள் மீது விசாரணை முடிவடையாத நிலையிலேயே குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதன் உண்மை தன்மை இதுவரை வெளிப்படவில்லை.

2009 ஆம் ஆண்டு போருக்கு பின்னர் தன்னை கட்டமைத்துக்கொள்ளக்கூடிய பலம் இலங்கைக்கு இல்லாத நிலையில் அது சீனாவை சார்ந்தது. சீனா மட்டுமல்ல பல நாடுகளை சார்ந்தது. சீனாவுடன் ஆதரவு அல்லது சார்புத் தன்மை இருந்தால் ஏனைய நாடுகள் இலங்கைக்கு உதவ முன் வராது.

இவ்வாறு பல நாடுகளின் உதவியுடன் தமிழினத்தினுடைய விடுதலைப் போராட்டத்தை அழித்த பிறகு தான் இலங்கை அடிமைத்தனத்துக்குள் உட்பட்டது” என்றார். 


தொடர்புடைய செய்தி 

விடுதலைப் புலிகளின் தலைவரை உணர்ந்த சிங்கள தரப்பு
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015