முல்லைத்தீவில் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள்
முல்லைத்தீவு (Mullaitivu) காட்டுப் பகுதியில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவு காவல்துறையினரால் சிலாவத்தை தியோநகர் காட்டுப் பகுதியில் குறித்த துப்பாக்கி ரவைகள் நேற்று (14) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், ”குறித்த காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கடற்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கடற்படையினர் கண்டுபிடிப்பு
இதனையடுத்து கடற்படையினரும், முல்லைத்தீவு காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையிட்டு பார்த்தபோது உரப்பை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த உரப்பையில் இருந்து மீட்கப்பட்ட 1,400 ரி56 ரக துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
எனினும் இந்த துப்பாக்கி ரவைகள் வெடிக்காத நிலையில் பழுதடைந்து இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்