அரசியல் தீர்வு கோரிய '100 நாட்கள் செயல்முனைவு திட்டம்' - வவுனியாவில் முன்னெடுப்பு
இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களுக்கு மதிப்பான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற தொனிப் பொருளிலான கவனயீர்ப்பு நிகழ்வொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும் என மக்கள் வலியுத்தியுள்ளனர்.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் சுழற்சி முறையில் 100 நாட்கள் செயல்முனைவு திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
96 ஆவது நாள் நிகழ்வுகள்
குறித்த செயல் முனைவுப் போராட்டத்தின் 96 ஆவது நாள் நிகழ்வுகள் வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்றது.
இதன்போது நாங்கள் நாட்டை துண்டாடவோ, தனியரசோ கேட்கவில்லை, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம்' எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை போன்ற பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த கவனயீர்ப்பில், பிரதேச மக்கள், இளைஞர்கள், விவசாயிகள், குடிசார் சமூக அமைப்புக்கள், என பலரும் கலந்துகொண்டு கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கைகளை முன் வைத்தனர்.


நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா
