12 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது
India
arrest
fishermen
navy
By Vanan
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய கடற்றொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.
தலைமன்னார் வடக்கு கடற்பரப்பில், நேற்றிரவு 2 படகுகளுடன் குறித்த கடற்றொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட 12 பேரும் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதானவர்களை தலைமன்னாருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க, கடற்றொழிலாளர்களின் கைதினை கண்டித்து காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுத்திருந்த இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள், நேற்று முதல் மீளவும் மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.