இலங்கை கடற்பகுதியில் ஈரானிய கப்பல்கள் :அமைச்சர் வெளியிட்ட தகவல்
அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஈரானியக் கப்பல்களை இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதா என அமைச்சரவையின் முடிவை அறிவிப்பதற்காக இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில், பத்திரிகையாளர்கள் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் கேள்வி எழுப்பினர்.
அச்சந்திப்பில், கடந்த சில நாட்களில் சுமார் 12 ஈரானியக் கப்பல்கள் நாட்டின் அனுமதியின்றி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளதாக பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டினர்.
எனக்கு எதுவும் தெரியாது
நாட்டின் எல்லைக்குட்பட்ட கடல் எல்லையான தரைப்பகுதியிலிருந்து 12 கடல் மைல் எல்லையைக் கடந்து, கப்பல்கள் 11.5 கடல் மைல் வரை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இவ்விஷயம் குறித்து தமது கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, இவ்விஷயம் குறித்து தமக்குத் தெரியாது என்றும், இது குறித்து வெளியுறவு அமைச்சு விசாரிக்கும் என்றும் கூறினார்.
மத்திய கிழக்கில் போரின் தீவிரம் அதிகமாக இருந்தபோதும், உயிர்களைக் காப்பாற்றும் ஒரே நோக்கத்திற்காக இரு தரப்பினரும் உதவிகரமான முறையில் செயல்பட்டனர் என்றும், அத்தகைய சூழ்நிலையில் போரில் எந்தத் தரப்பையும் ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |