யாழில் கொட்டித் தீர்த்த மழை காரணமாக 14பேருக்கு பாதிப்பு
Jaffna
Sri Lankan Peoples
Climate Change
Weather
By Dilakshan
காற்றுடன்கூடிய மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் முன்று குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா இதனை தெரிவித்துள்ளார்.
வீடுகள் சேதம்
அவர் மேலும் தெரிவிக்கையில், வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/28 கிராம சேவகர் பிரிவில் காற்றுடன் கூடிய மழை காரணமாக இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 10பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/169 கிராம சேவகர் பிரிவில் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் நால்வர் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி