வயிற்று வலி என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி
வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் பதுளை (Badulla) - ஹப்புத்தளை, கெல்பன் தோட்டம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கெல்பன் தோட்டம் பகுதியை சேர்ந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி காரணமாக தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுமியிடம் வாக்குமூலம்
சிறுமியை பரிசோதித்த பிறகு, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை காவல்துறையினர் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர், கெல்பன் தோட்டத்தை சேர்ந்த 52 வயதான நபரொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
ஹப்புத்தளை காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
