சீனாவிற்கு படையெடுத்துள்ள எம்.பிக்கள் குழு
15 பேரை உள்ளடக்கிய அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றக் குழு கல்விச் சுற்றுலாவுக்காக சீனா சென்றுள்ளது.
அவர்களுடன் நாடாளுமன்ற துணைச் செயலாளர் நாயகமும், தலைமைப் பணியாளருமான சட்டத்தரணி சமிந்த குலரத்ன, மற்றும் மூன்று நாடாளுமன்ற அதிகாரிகளும் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளனர்.
ஒரு வாரத்திற்கும் மேலாக சீனாவில் தங்கியிருக்க திட்டம்
இந்தக் குழு ஒரு வாரத்திற்கும் மேலாக சீனாவில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்தப் பயணங்கள் பெரும்பாலும் பல்வேறு சர்வதேச அமைப்புகளின் நிதியுதவியுடன் இடம்பெறுகின்றன.
ரில்வின் சில்வாவின் சீன விஜயம்
இதனிடையே ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான ஆளும்கட்சியைச் சேர்ந்த குழுவினர் சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியுள்ள நிலையில், இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்விச் சுற்றுலாவிற்காக சீனா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
