வாகன இறக்குமதி மூலம் சுங்கத்திற்கு கிடைத்த பல பில்லியன் வருமானம்
இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியுடன், வாகன இறக்குமதியிலிருந்து மட்டும் இதுவரை 163 பில்லியன் ரூபா சுங்க வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் (Sri Lanka Customs) தெரிவித்துள்ளது.
கொழும்பில் (Colombo) நடைபெற்ற ஊடக சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய அதன் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட (Seevali Arukgoda) இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "2025 ஆம் ஆண்டில் நாங்கள் பெற்ற வருமான இலக்கு 2,115 பில்லியன் ரூபா. கடந்த ஆண்டு, எங்கள் வருமான இலக்கு 1,533 பில்லியன் ரூபாவாக இருந்தது.
14,000 வாகனங்கள இறக்குமதி
கடந்த ஆண்டு, நாங்கள் அந்த இலக்கை தாண்டி 1,535 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டினோம். அதேநேரம் இந்த ஆண்டும், ஜூன் மாத நடுப்பகுதியில், நாங்கள் 900 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளோம்.
வாகனங்களைப் பொறுத்தவரை, 2025 பெப்ரவரி 1, முதல் வாகன இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்தது. இதுவரை, சுமார் 14,000 வாகனங்கள இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
நாங்கள் சுமார் 165 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளோம். இந்த ஆண்டு, வாகன இறக்குமதியிலிருந்து 450 பில்லியன் ரூபாவை எதிர்பார்க்கிறோம்." என தெரிவித்தார்.
இதேவேளை ஈரான் - இஸ்ரேல் போர் நாட்டிற்குள் பொருட்களை இறக்குமதி செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீவலி அருக்கொட, “நாட்டிற்குள் பொருட்களை இறக்குமதி செய்யும் கப்பல்கள் தாமதமானதாக இதுவரை அறிவிக்கப்படவில்லை“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
