பல கோடி பணமோசடி - ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரையான இலங்கையை சேர்ந்த நடிகை - துபாய் செல்ல டில்லி நீதிமன்றம் அனுமதி!
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நடிகையான ஜாக்குலின் பெர்ணான்டஸ் பணமோசடி செய்ததாக அண்மையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
தொழிலதிபர் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் இடையே இடம்பெற்ற பணப் பரிவர்த்தணை மோசடி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்தநிலையில், குறித்த நடிகையை தொழில் ரீதியிலான கடமைகளுக்காக மட்டும் வெளிநாடொன்றுக்கு செல்ல புதுடில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பணமோசடி
சுகேஷ் சந்திரசேகர் மற்றும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் இடையே இடம்பெற்ற 200 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தணை தொடர்பில் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, நடிகை ஜாக்குலினின் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியதுடன், நடிகை ஜாக்குலினிடம் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
துபாய் - பெப்சிகோ மாநாட்டிற்கு செல்ல அனுமதி
இந்தநிலையில், தற்போது புதுடில்லி நீதிமன்றம் துபாயில் நடைபெறும் பெப்சிகோ மாநாட்டில் அவர் கலந்து கொள்வதற்கு செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த மாநாட்டினை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் தவிர்த்தால் அவர் மீது வழக்கு தொடரப்படலாம் என ஜாக்குலினின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்ததையடுத்து அவருக்கு குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரை
இதேவேளை, அவர் ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், இது நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணமாகும் எனவும் சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.