2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நாளை சமர்ப்பிப்பு
நிலையான மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை நோக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க நாளை (14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில், மூலதனச் சந்தை, ஏற்றுமதிச் சந்தை, தொழிலாளர் சந்தை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், சமூக சந்தைப் பொருளாதாரத்தின் ஊடாக வரவு - செலவுத் திட்ட இலக்குகளை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம்
வரவு - செலவுத் திட்டத்தில் சமூக நலன்கள், கட்டாயம் தேவைப்படும் மக்களுக்கு வழங்குவது மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் உந்து சக்தியாக தனியார் துறையை கட்டியெழுப்புவதற்கான கொள்கை பின்புலத்தை உருவாக்குவது குறித்து அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் நவீன உலகிற்கு ஏற்ற நவீன பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையை ஆரம்பிப்பதன் மூலம் இளைஞர்களுக்கான நாட்டைக் கட்டியெழுப்பும் புதிய வேலைத்திட்டம் உருவாக்கப்படவுள்ளதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

