ஜனாதிபதியின் மன்னிப்பு போர்வையில் விடுதலையான கைதிகள் எத்தனை பேர் தெரியுமா..!
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
Prison
By Sumithiran
குற்றப் புலனாய்வுத் துறை வட்டார தகவலின்படி ஜனாதிபதி மன்னிப்புக்கு தகுதியற்ற கடந்த ஆண்டு மற்றும் கடந்த கிறிஸ்துமஸில் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 26 கைதிகள் விடுவிக்கப்பட்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சில சிறைத் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்த நடவடிக்கைகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை சிறப்பு விசாரணை நடத்தி வருகிறது.
கைதியை பிடிக்க களத்தில் இறங்கிய காவல்துறை குழுக்கள்
இதற்கிடையில், ஜனாதிபதி மன்னிப்பை பயன்படுத்தி சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட அனுராதபுரத்தைச் சேர்ந்த திலகரத்ன என்ற சந்தேக நபரைக் கைது செய்ய பல காவல்துறை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
விளக்கமறியலில் துஷார உப்புல்தெனிய
இதேவேளை குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவை நாளை (11)வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
