இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட விலை உயர்ந்த புறாக்களுடன் நெடுந்தீவில் மூவர் கைது!
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட விலை உயர்ந்த புறாக்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் வைத்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 237 விலை உயர்ந்த புறாக்களை இந்தியாவிலிருந்து இரகசியமான முறையில் பிளாஸ்ரிக் கொள்கலன்களுக்குள் மறைத்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலை
குறித்த புறாக்களை சட்டவிரோதமாக கடத்தி வந்த சந்தேகத்தின் பேரில் நெடுந்தீவு கடற்படை மற்றும் காவல்துறையினரினால் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து கைதான மூவரும் 237 புறாக்களும் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் படகும் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக நெடுந்தீவு காவல்துறையினர் தெரிவித்தனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |