சிறிலங்கா கடற்படை மீட்ட ஈரானிய கடற்படையினருக்கு வழங்கப்படவுள்ள நுழைவிசைவு
சிறிலங்கா கடற்படையால் மீட்கப்பட்ட 230 ஈரானிய கடற்படையினருக்கும், 30 நாள் நுழைவிசைவு வழங்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐஆர்ஐஎஸ் டேனா என்ற கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்த பின்னர், மீட்கப்பட்ட 32 ஈரானிய கடற்படையினரும், இரண்டாவது ஈரானிய கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேரில் இருந்த 208 பேரும் இந்தக் குழுவில் அடங்கியுள்ளனர்.
நுழைவிசைவு வழங்குவது தொடர்பான நடவடிக்கை
இவர்களுக்கு நுழைவிசைவு வழங்குவது தொடர்பான நடவடிக்கைக்கு நாளையதினம்(09) அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் கோரப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஈரானிய குழுவிற்கு தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், கொழும்பில் உள்ள ஈரானிய தூதரகத்திடமும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களைத் திருப்பி அனுப்புவது
தொடர்புடைய அனைத்துலக சட்டங்களின்படி, அவர்களைத் திருப்பி அனுப்புவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |