39 சீன பிரஜைகள் கைது - காவல்துறை வெளியிட்ட பகீர் தகவல்கள்
ஒன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து 39 சீன பிரஜைகள் கொண்ட குழுவொன்று அளுத்கமவில் கைது செய்யப்பட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட குழு, உலகெங்கிலும் உள்ள மக்களிடம் பணத்தை மோசடி செய்த குழு எனவும் சீன அதிகாரிகளின் உதவியுடன் உள்ளூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச காவல்துறையால் தேடப்படும் மூவர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் சர்வதேச காவல்துறையால் சிவப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள சீனாவினால் தேடப்படும் மூன்று குற்றவாளிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
சனிக்கிழமை (01) கைது செய்யப்பட்டவர்களில் 33 ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 6 மாதங்களாக இலங்கையில்
சந்தேகநபர்கள் கடந்த 6 மாதங்களாக இலங்கையில் தங்கியிருந்ததாகவும், சிலரை அவர்களது விருப்பத்திற்கு மாறாக தங்கவைத்து ஒன்லைன் நிதி மோசடியில் ஈடுபட வற்புறுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மூன்று சந்தேக நபர்களிடம் கடவுச்சீட்டுகள் இல்லை எனத் தெரிவித்த காவல்துறை, அவர்களது கடவுச்சீட்டுக்களை பிரதான சந்தேக நபர் எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து கணனிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணம் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
