தமிழர் பகுதியில் பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகள்: அதிகாரிகள் விடுத்த அதிரடி அறிவிப்பு
வவுனியா(Vavuniya) நகரசபையினால் வீதிகளில் நடமாடித் திரிந்த 50 கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கை நேற்றிரவு(20.03.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் நடமாடும் கால்நடைகளால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெறுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளன.
பிடிக்கப்பட்ட கால்நடைகள்
இதனையடுத்து, நகரசபைக்குள்ள அதிகாரங்களை கொண்டு கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளில் பொது போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற 50க்கும் மேற்பட்ட கால்நடைகள் நேற்றிரவு நகர சபையினரால் பிடிக்கப்பட்டுள்ளன.
எனவே, கால்நடை உரிமையாளர்கள் தமது கால்நடைகளுக்குரிய அடையாளத்தினை உறுதிப்படுத்தியபின் தண்டப்பணத்தினைச் செலுத்தி அவற்றை மீளப்பெற்றுச் செல்லுமாறு சபையினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உரிமையாளர்களுக்கான அறிவித்தல்
அதன்படி, கட்டாக்காலி மாடு பிடி கூலி ஆயிரம் ரூபாய், தண்டப்பணம் மூவாயிரம் ரூபாய், நாள் ஒன்றிற்கான பராமரிப்புக் கட்டணம் ஆயிரம் ரூபாய் என்பவற்றை செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, 10 நாட்களுக்குள் உரிமை கோரப்படாத கால்நடைகள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகர சபை அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்