காசாவில் உணவுக்காக காத்திருந்தோர் மீது குண்டுவீச்சு: 50 போ் கொடூரமாக பலி
காஸாவில் (Gaza) இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் உணவுப் பொருள்களுக்காக காத்திருந்தவா்கள் உள்பட சுமாா் 50 போ் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய காஸாவின் நெட்ஸாரிம் பகுதிக்கு அருகே நிவாரணப் பொருள்களை வாங்குவதற்காக ஏராளமானவா்கள் குழுமியிருந்தனா்.
அவா்களை நோக்கி இஸ்ரேல் படையினா் சுட்டதில் 35 போ் உயிரிழந்ததாக அல்-அவ்தா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
காஸாவில் பஞ்சம்
இது தவிர, ஒரு குடியிருப்பின் மீது இஸ்ரேல் விமானங்கள் நடத்தி குண்டுவீச்சில் எட்டு போ் உயிரிழந்துள்ளனர்.
இந்த 43 பேருடன் சோ்த்து, காஸா முழுவதும் இஸ்ரேல் இராணுவம் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் சுமாா் 50 போ் உயிரிழந்ததாக மருத்துவமனைகள் வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.
சுமாா் மூன்று மாதங்களாக நீடித்த முற்றுகை காரணமாக காஸாவில் பஞ்சம் ஏற்பட்டு, ஏராளமானவா்கள் பட்டினிச் சாவுக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டது.
நாடுகளின் வற்புறுத்தல்
இதையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக குறைந்தபட்ச அளவிலான நிவாரணப் பொருள்களுக்கு அனுமதி அளிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.
காஸாவில் வழக்கமாக நிவாரணப் பொருளகளை விநியோக்கும் ஐ.நா. பிரிவுக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளதால், அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜிஹெச்எஃப்) கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் அந்தப் பணியை மேற்கொண்டுவருகிறது.
இருந்தாலும், விநியோக மையங்களுக்கு வருவோா் மீது இஸ்ரேல் படையினா் நடத்தும் துப்பாக்கிச்சூட்டில் இதுவரை நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
