தசாப்தம் கடந்த உலகத் தமிழர் வரலாற்று வளாகம்! மக்கள் சந்திப்பு
உலகத் தமிழர் வரலாற்று வளாகம் ஆரம்பிக்கப்பட்டு “இலட்சியப் பாதையில் ஒரு தசாப்த பயணத்தினை கடந்துவிட்ட நிலையில் வழித்தடத்தில் வளாகம் வழியமைப்போம் யாமும் " என்ற தொனிப்பொருளில், மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, கடந்த 30.05.2026 அன்று சனிக்கிழமை றஸ்லிப்பில் அமைந்துள்ள GRANTVIEW மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
அந்த வகையில் பொதுச் சுடர்கள், பிரித்தானியா மற்றும் தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடன் பொது மாவீரருக்களுக்கான ஈகச்சுடர்,மலர் மாலை அணிவித்தலுடன் அக வணக்கத்தை தொடர்ந்து சிவநர்த்தாலய மாணவிகளின் மாவீரர் நினைவு பாடலுக்கான நடனத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
மக்கள் நலன் சார் அபிவிருத்தி விடயங்கள்
நோக்க உரையினை உலகத் தமிழர் வரலாற்று வளாக மேலாண்மைப் பணிப்பாளர் அகிலன் வழங்கியுள்ளார்.
நிர்வாக கட்டமைப்புகள் மற்றும் தாயக செயற்பாடுகள் தொடர்பாக உலகத் தமிழர் வரலாற்று வளாக ஆலோசகர் பாலகிருஷ்ணன், உரை நிகழ்த்தியதைத் தொடர்ந்து உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற வேலை திட்ட நிகழ்வுகளின் தொகுப்பினை காணொளியாக சங்கீதன் விளக்கமாக எடுத்துரைத்தார்.

தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலன் சார் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பான காணொளியும் அதன் விளக்கத்தினை வினோத் கலந்து கொண்ட மக்கள் அனைவருக்கும் எடுத்துரைத்தார். தாயகத்தில் தற்போது தேவைக்கு உட்படுத்தப்பட வேண்டிய விபரங்கள் தொடர்பாக விவரித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து உலகத் தமிழர் வரலாற்றுவளாக நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டிட விரிவாக்க செயல் திட்டங்களும், எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் தமிழீழ கட்டிட நிர்மான வேலைகள் தொடர்பாகவும் உலகத் தமிழர் வரலாற்று வளாக முன்னாள் மேலாண்மைப் பணிப்பாளர் வசந்தன் காணொளி வடிவிலும், உரை ஊடாகவும் விளக்கமாக விபரித்தார்.
நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பேராளர்களின் கருத்துப் பகிர்வுடன் உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தின் செயலாளர் விசாகனின் நன்றி உரையுடன் “வழித்தடத்தில் வளாகம் வழியமைப்போம் யாமும்”என்ற தொனிப்பொருளில் கலந்துரையாடல் இனிதே நிறைவுற்றது.






செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |