கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக போதைப்பொருளை கடத்திச் செல்ல முயன்ற வெளிநாட்டுப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை இன்று (03) அதிகாலை காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இதன்போதுஈ சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து சுமார் 21 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
779 கிராம் எடையுடைய குஷ் போதைப்பொருள்
இது குறித்து மேலும் தெரியவருகையில், சந்தேகநபர் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் இருந்து போதைப்பொருளை கொள்வனவு செய்து, பின்னர் ஹாங்கொங் ஊடாக 'கதே பசிபிக்' விமான சேவைக்குச் சொந்தமான CX-611 என்ற விமானத்தில் இன்றையதினம் அதிகாலை 12:30 மணியளவில் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.
இதன்போதே, அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோகிராம் 779 கிராம் எடையுடைய குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 21 கோடியே 77 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 42 வயதுடைய கனடா நாட்டவர் எனவும், அவர் ஒரு கட்டிட ஒப்பந்ததாரர் என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளாார்.
தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு

இந்த நிலையில், சந்தேகநபர் உட்பட அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையை இன்று (03) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பிலுள்ள காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமையகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்