பளீல் கொலை வழக்கு: பதிலில்லாத கேள்விகளும் பேசப்படும் சந்தேகங்களும்
காத்தான்குடி பிரதேச செயலாளராக இருந்த ஏ.எல்.எம். பளீல் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணி அரசியல் பழிவாங்கல்களாக இருக்கும் என்ற கருத்து இன்றும் காத்தான்குடி மக்கள் மத்தியில் உலாவுகிறது.
அரசியல் பழிவாங்கல்கள், உள் முரண்பாடுகள் மற்றும் அதிகாரப் போட்டிகள் காரணமாக இருந்ததாகக் கருதப்படும் இந்த கொலையின் சூத்திரதாரிகள் யார் என்பது இன்றும் வெளிவராத ஒர மர்மமாக நீடிக்கிறது.
2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. அக்காலப்பகுதியில் முஸ்லிம் சமூகத்திற்குள் நிலவிய உள் அரசியல் பிளவுகள் மற்றும் அரசியல் ரீதியான பழிவாங்கல்களே இக்கொலை முயற்சிக்கு வழிவகுத்ததாக ஆரம்பக்கட்ட காவல் துறை விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
இவரை ஒரு பகுதிநேர எழுத்தாளராகச் சிலர் அடையாளப்படுத்தினாலும், அவர் தீவிரமான ஊடகப் பணிகளில் ஈடுபடவில்லை என்றும், காத்தான்குடியின் உயர் அரச அதிகாரியாக (பிரதேச செயலாளர்) இருந்தமையே அவரது படுகொலைக்கு முக்கியக் காரணம் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் காத்தான்குடி மக்கள்.
இவ்வாறு பளீல் கொலையில் தொடரும் பல மூடிமறைக்கப்பட்ட விடயங்களை விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |